போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மைனா படத்திற்கு பிறகு பிரபல குணசித்ர நடிகரான தம்பி ராமைய்யா தற்போது பல படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் காமெடிக்கு முதலிடம் கொடுத்த அவர் ஒரு கட்டத்தில் கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்தார். இப்போது வெயிட்டான குணசித்ர வேடங்களாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறார்.
மேலும், தனது மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் முதலில் நடிக்கும் முடிவில் இல்லாத அவர், ஒருகட்டத்தில் அப்படத்தின் வியாபாரம் கருதி தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதே படத்தில் உமாபதியுடன் படம் முழுக்க வரும் நண்பனாக கருணாகரன் நடித்திருந்தபோதும், தம்பி ராமைய்யாவின் கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படம் எனது மகனுக்கு பெரிய ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுக்கும் என்று கூறும் தம்பி ராமைய்யாவிடம், மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படங்களை இயக்கியுள்ள நீங்கள், உங்கள் மகனை வைத்து படம் இயக்குவீர் களா? என்று கேட்டபோது, அப்படியொரு எண்ணமே என்னிடம் இல்லை. இப்போது நான் முழுநேர நடிகன். அதனால் அடுத்தபடியாக படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையே எனக்கு வரவில்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பர்பாமென்ஸ் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே எனது தற்போதைய நோக்கமாக உள்ளது என்கிறார் தம்பி ராமைய்யா.