போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்து பின்னர் ரெட்டைச்சுழி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் எழுத்தாளர் தாமிரா. முதல் படத்திலேயே பாரதிராஜாவையும், கே.பாலச்சந்தரையும் இணைந்து நடிக்க வைத்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஆண்தேவதை. இதில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடிக்கிறார். நாகியாக ஜோக்கர் படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் நடிக்கிறார். இவர்கள் தவிர கவின், கஸ்தூரி, பூ ராமு, இளவரசு, ஸ்ரீநிகா, பிரகதீஷ், யாழ்நிலா, மயில்சாமி, அருண்மொழி, திலீபன் நடிக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். தனது நண்பர் பக்ருதீனுடன் இணைந்து தாமிராவே தயாரிக்கிறார்.
படம்குறித்து தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்ஒர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.
‛‛ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதையும் படம் உணரவைக்கும்'' என்று கூறியுள்ளனர்.