‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நேற்று முன்தினம் சென்னையில், வெங்கட்பிரபு வின் சென்னை-28 பார்ட்-2 படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. அப்போது அந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் ஆஜரான நிலையில், ஜெய் மட்டும் வரவில்லை. எனக்கு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வழக்கம் இல்லை என்று சொல்லி அவர் நழுவி விட்டதாக சொன்னார்கள்.
ஆனால், அம்மா கிரியேசன்ஸ் சிவா பேசுகையில், அவர் தன்னை அஜீத் என்று நினைத்துக்கொள் கிறார் என்று ஜெய்யை மேடையில் விளாசித்தள்ளி னார். அப்போது வெங்கட்பிரபு குறுக்கிட்டு, நான் ஜெய்யை கண்டிப்பாக வரவேண்டும என்று அழைக்கவில்லை. அழைத்திருந்தால் வந்திருப்பார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
முன்னதாக, இந்த படத்தில் நடித்துள்ள யாருக்கும் ஈகோ கிடையாது. பணம் காசைப்பற்றி கவலைப்படாமல் நடித்துக்கொடுத்தனர். விஜய் வசந்தெல்லாம் காருக்கு பெட்ரோல் போட்ட காசைகூட கேட்கவில்லை. அதோடு பலநாட்கள் ஓட்டல்களுக்கு அழைத்து சென்று செலவு செய்தார். அந்த அளவுக்கு தங்களது சொந்த படம் என்கிற மனநிலையில்தான் நடித்தார்கள் என்று சொன்ன வெங்கட்பிரபு, படப்பிடிப்பு நடந்து வந்தபோது ஜெய்தான் ஒருநாள் ரொம்ப பீல் பண்ணினார். படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு 2 பாட்டு, பிரேம்ஜிக்கு ஒரு பாட்டு. ஆனா எனக்கு மட்டும் ஒரு பாட்டுகூட கிடையாதா? என்று பீல் பண்ணியதாகவும் சொன்னார். ஆக, ஷோலோ ஹீரோவாக 20 படங்களில் நடித்து விட்ட தனக்கு ஒரு பாடல்கூட படத்தில் இல்லாததுதான் ஜெய்க்கு பெரிய வருத்தமாம். அதனால்தான் சென்னை-28 பார்ட்-2 பிரஸ்மீட்டில் ஆப்சென்டாகி விட்டாராம் ஜெய்.