‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சத்யசரவணா இயக்கியுள்ள படம் மஞ்சள். புதுமுக நாயகன் திரு நடித்துள்ள இந்த படத்தில் சசி நாயகியாக நடித்துள்ளார். அவர்களுடன் சிங்கம்புலி காமெடியனாக நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே ஆடியோ வெளியான இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதன்காரணமாக அந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் நடிகை சசி எந்த புதிய படத்தையும் ஏற்காமல் மஞ்சள் படத்திற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து சசி கூறுகையில், மஞ்சள் படத்தில் கிராமத்து நாயகியாக நடித்திருக்கிறேன். இந்த படத்தின் கதை என்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. அதனால் முதல் படத்திலேயே அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறேன். அதற்கெல்லாம் மேலாக, கிராமத்து பெண்ணாக என்னை முழுமையாக மாற்றிக்கொள்ள எனது உடம்பு முழுக்க கறுப்பு கலர் மேக்கப் போட்டு நடித் தேன். அதையடுத்து கண்ணாடி முன்பு நின்று பார்த்தபோது எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. அதேசமயம் அந்த கிராமத்து கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதாக அனைவரும சொன்னார்கள். அதனால் முழுஈடுபாடு காட்டி மஞ்சள் படத்தின் டித்திருக்கிறேன்.
ஆனால், எதிர்பார்த்தபடி அந்த படம் திரைக்கு வரவில்லை. அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்கிறார்கள். அதனால் என்னைத்தேடி சில புதிய படங்கள் வந்தபோதும் அந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. காரணம், மஞ்சள் படத்தில் நான் நடித்திருப்பதை மற்ற டைரக்டர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எனக்கு வெயிட்டான நாயகி வேடம் தருவார்கள். அது இல்லாமல் நான் இப்போதே புதிய படங்களில் நடித்தால் என்னை சாதாரணமான வேடங்களில் நடிக்க வைத்து விடுவார்கள். அதனால்தான் மஞ்சள் படம் வெளியான பிறகு புதிய படங்களில் கமிட்டாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார் நடிகை சசி.