போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான வின்செண்ட் அடைக்கலராஜ் கணேஷ் 365 என்ற விநாயகர் கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27ந் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியில் விநாயகரின் 365 அவதாரங்கள் ஓவியமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதையட்டி குழந்தைகளுக்கான விநாயகர் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிக்கவும், விநாயகர் கண்காட்சியை பார்வையிடவும் நடிகை கவுதமி நேற்று வந்தார். அவர் கண்காட்சியை சுற்றிப் பார்த்தார். வெற்றி பெற்ற குழந்தைகளுக்க பரிசு மற்றம் சான்றிதழை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிதாவது:
கலை என்பது ஒரு தரப்பு மக்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. உலகில் பிறந்த அனைத்து மக்களுக்கும் அது பொதுவானது. இப்படிப்பட்ட அற்புதமான ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கலையின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்த கணேஷ் 365 என்னும் முயற்சியை எடுத்த வின்சென்ட் சாருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறினார் கௌதமி. இந்த கணேஷ் 365 ஓவியக்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது கவுதமி நடத்தி வரும் லைப் அகைன் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.