நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
பொங்கி எழு மனோகரா படத்தில் நடித்தவர் அருந்ததி நாயர். அதன்பிறகு விருமாண்டியும் சிவனாண்டியும், சைத்தான் படங்களில் நடித்திருப்பவர், அடுத்த படியாக விதார்த் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். அதோடு, சில டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வருகிறார். மேலும், நான் நயன்தாராவின் ரசிகை என்று சொல்லிக்கொள்ளும் அருந்ததி நாயர், பர்பாமென்ஸ்ரீதியாக அவரை பின்பற்றினாலும் கிளாமரில் அவரை பின்பற்ற மாட்டேன். அந்த விசயத்தில் அசின் மாதிரி அளவோடுதான் நடிப்பேன் என்கிறார்.
மேலும், அனுஷ்கா நடித்தது போன்ற அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது சினிமா கனவாகியிருக்கிறது. குறிப்பாக அருந்ததி, ருத்ரம்மா தேவி போன்ற படங்களில் அனுஷ்காவின் நடிப்பை பார்த்து அதிர்ந்து விட்டேன். அந்த அளவுக்கு அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்திருந்தார் அவர். கிட்டத்தட்ட ஆக்சன் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தை சுமந்திருந்தார். அதனால் என்னை நடிப்பில் மிரட்டிய முதல் நடிகை அனுஷ்காதான். நானும் 5.8 உயரம் இருப்பதால் என்னை பார்ப்பவர்களும் ஆக்சன் கதைகளுக்கு பொருத்தமாக இருப்பதாக சொல்கிறார்கள். அதனால், எதிர்காலத்தில் ஆக்சன் கதைகளில் நடித்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் உள்ளது என்கிறார் அருந்ததி நாயர்.