‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடிக்கிறவரை பிரபலமில்லாத நடி கர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் நித்யாமேனன். ஆனால் அந்த படத்திற்கு பிறகு சுதீப்புடன் முடிஞ்சா இவன புடி, விக்ரமுடன் இருமுகன், ஜூனியர் என்டிஆருடன் ஜனதா கேரேஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். முக்கியமாக, அதற்கு முன்பு வரை நித்யாமேனன் குறைவான உயரம் கொண்டவர் என ஓரங்கட்டியவர்கள்கூட, இப்போது அதை ஒரு விசயமாகவே எடுத்துக்கொள்வதில்லை. அதுதான் நடிப்பில் உயர்ந்த நடிகையாகி விட்டாரே என்று நித்யாமேனனை புகழ்கிறார்கள்.
மேலும், கதாபாத்திரங்களுக்காக தனது உடல் எடையையும் குறைப்பதில்லை நித்யாமேனன். எடை குறைத்து ஸ்லிம் நடிகையாகிவிட்டால் இன்னும் உயரமாக தெரிவீர்கள் என்று சிலர் சொன்னபோது, சினிமாவுக்காக விருப்ப உணவுகளை எல்லாம் ஓரங்கட்ட என்னால் முடியாது. நான் நினைத்ததை சாப்பிட்டால்தான் மனசு சந்தோசமாக இருக்கும். அப்போதுதான் முகத்தில் அழகு வெளிப்படும். அந்த அழகு போலித்தனம் இல்லாமல் இயல்பானதாக இருக்கும். அப்படி நடிக் கும்போது நடிப்பிலும் ஒரு அழகுதன்மை வெளிப்படும் என்று தனது நிலையை சொல்கிறாராம் நித்யாமேனன். ஆக, அமுல் பேபியாகவே சினிமாவில் வலம்வர முடிவெடுத்து விட்டார் நித்யா.