போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மிருகம் படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகர் ஆதிக்கு தமிழில் இன்னும் நேரம் வொர்க் அவுட்டாகவில்லை. பல படங்களில் நடித்தும் அவரால் முதல்வரிசைக்கு வர முடியவில்லை. கடைசியாய் அவர் நடித்த படம் 'யாகவராயினும் நா காக்கா'. இந்தப் படத்தை அவரது அப்பா தயாரித்தார். ஆதியின் சகோதரர் இயக்கினார். 'யாகவராயினும் நா காக்கா' படமும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், 'யாகவராயினும் நா காக்கா' படத்தைத் தொடர்ந்து ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மரகத நாணயம்' என்று பெயரிட்டுள்ளனர்.
ஆடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமாம் இது. எனவே, இந்த படத்திற்காக ஆடுகளை மையப்படுத்தி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார் 'நெருப்புடா...' பாடல் புகழ அருண்ராஜா காமராஜ் . ஜமுனா பாரி, பீட்டல், பார்பாரி, தெல்லிச்சேரி, பெராரி என எல்லா ரக ஆடுகளின் பெயர்களையும் இப்பாடலில் உள்ளடக்கி எழுதி பாடியுள்ள அருண்ராஜா காமராஜ், இப்பாடலுக்காக ஆடுகளின் குரலை பிரத்தியேகமாக பதிவும் செய்துள்ளார். இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் திபு இசை அமைக்கிறார்.