இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. அதன் பிறகு ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் அதிக வாய்ப்பில்லை. இதனால் ஷியாம் ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். மீண்டும் அவர் நடிக்க ஆசைப்பட்டபோது மலையாள சினிமா கனிகாவுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. கடைசியாக ஓ காதல் கண்மணியில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதற்கிடையில் கனிகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர் கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை கனிகா மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: 8 வருடங்களுக்கு முன்பு என் கணவரை திருமணம் செய்து கொண்டபோது எப்படி அவரை காதலித்தேனோ அப்படியே இப்போதும் காதலிக்கிறேன். அந்த அன்பு எங்களிடம் குறையவே இல்லை. நான் காதலை நம்புகிறவள். என் கணவரை காதலிக்கிறேன். இணையதளங்களில் நான் கணவரை பிரிய போவதாக எழுதுகிறார்கள். அதில் எள்ளளவும் உண்மையில்லை. இணையதளங்களில் என்னை வம்புக்கு இழுக்கிறார்கள். தயவு செய்து அதனை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் கனிகா.