ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சினிமாவில் கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் தவறவிட்டவர்கள் பலர். அவர்களில் இயக்குநர் வெங்கட்பிரபுவும் ஒருவர். கங்கை அமரனின் மகன் என்ற விசிட்டிங் கார்ட் உடன் படத்துறைக்கு வந்தவருக்கு 'சென்னை 28' படத்தின் வெற்றி சிவப்புக் கம்பளத்தை விரித்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கிய அவருக்கு வெற்றி கை நழுவிப்போனது.
தினமும் பார்ட்டி என்ற பெயரில் கேளிக்கையில் கவனத்தைத் திருப்பியதால் பட வாய்ப்பை இழந்தார். தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் அவரை நிராகரித்துவிட்டநிலையில் தற்போது தானே தயாரிப்பாளராகி 'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தை அடுத்து எப்படியாவது அஜித்தை வைத்து 'மங்காத்தா 2' இயக்க வேண்டும் என்று காயை நகர்த்தி வருகிறார். 5 வருடங்களுக்கு முன் வெளியான 'மங்காத்தா' படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படத்தின் க்ளைமேக்ஸை ட்விஸ்ட்டுடன் முடிந்திருந்தார் வெங்கட் பிரபு. இதனால், இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகும் என அப்போதே பேசப்பட்டது. அதை அவ்வப்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும் பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தார். இப்போது 'மங்காத்தா 2' பற்றி லேட்டஸ்ட்டாக வார இதழ் ஒன்றில், 'மங்காத்தா பார்ட் 2வை இயக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அது இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம்... அல்லது புதிய கதையாகவும் இருக்கலாம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இதற்கிடையில் 'பில்லா 2018' என்ற படத்தை அஜித் அல்லது சிம்புவை வைத்து எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.