மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

1990-ல் பாரதிராஜா இயக்கிய என் உயிர் தோழன் படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்தவர் தென்னவன். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தென்னவன், அதன்பிறகு விக்ரமின் ஜெமினி, கமலின் விருமாண்டி ஆகிய படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்தார். தொடர்ந்து சண்டக்கோழி, வாகைசூடவா, சுந்தரபாண்டியன், உன்னோடு கா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக செண்டிமென்டான வேடங்களாக நடித்துள்ள தென்னவன், தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து வைத்திருக்கிறார்.
மேலும், இவர் என் உயிர் தோழன் படத்தில் நடிகராக அறிமுகமானபோதும், அதற்கு முன்பே இயக்குனர் பாரதிராஜாவிடத்தில் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவராம். அவரைத்தான் என் உயிர்த்தோழனில் நடிகராக்கியிருக்கிறார் பாரதிராஜா. அதன்பிறகு தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்ததால் தனது இயக்குனர் ஆசையை தள்ளி வைத்து விட்டு நடித்து வந்த தென்னவனுக்கு இப்போது படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், மனதை தொடும் ஒரு கிராமத்து கதையை தற்போது ரெடி பண்ணிக்கொண்டிருக்கும் அவர், அதில் நடிப்பதற்கும் சில நடிகர் நடிகைகளிடம் கால்சீட் பேசி வருகிறார்




