போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்த் திரையுலகத்தில் ரேவதிக்குப் பிறகு அழகிலும், நடிப்பிலும் குடும்பப் பாங்கான கதாநாயகி எனப் பெயரெடுத்தவர் சினேகா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, மாதவன் என பல முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்திருந்தார்.
2012ல் நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்து கொண்ட பின்னும் அவர் நாயகியாக நடித்த 'முரட்டுக் காளை, ஹரிதாஸ், உன் சமையலறையில்' ஆகிய படங்கள் வெளிவந்தன. தாயான பின் நடிப்பதை முழுவதுமாகக் குறைத்துக் கொண்டார் சினேகா. தற்போது அவருடைய மகனுக்கு ஒரு வயது ஆகியுள்ள நிலையில் மீண்டும் திரையுலகில் நடிக்க முயற்சித்து வருகிறாராம்.
அதைப் பற்றிக் கேள்விப்பட்ட சில தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சினேகாவை மீண்டும் தங்களது படங்களில் நடிக்க வைக்க அவரைக் கேட்டுள்ளார்கள். ஆனால், நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என சினேகா தெரிவித்தார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினேகா அப்படி கூறியிதிலும் ஆச்சரியம் இல்லை. தமிழ்த் திரையுலகத்தில் முன்பெல்லாம் திருமணம் ஆனாலே அக்கா, அண்ணி, அம்மா வேடங்களைத்தான் தருவார்கள். நடிகை அமலா பால் திருமணம் ஆன பின்னும் நாயகியாகத்தான் நடித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் '36 வயதினிலே' படம் மூலம் ஜோதிகா நாயகியாகத்தான் நடித்தார். சினேகா போன்ற அழகான, திறமையான நடிகைகள் அப்படிக் கூறுவதில் தவறொன்றுமில்லை என்றும் சொல்கிறார்கள்.
இருந்தாலும் திருமணமாகி, குழந்தை பெற்ற பின் நடிக்க வந்துள்ள தன்னுடைய மற்ற போட்டியாளர்களுடன் சினேகா எப்படி போட்டியிடப் போகிறார் என்பதுதான் கேள்வி.