ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சினிமாவில் இயக்குனராகும் கனவோடு துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விபத்தொன்றில் திடீர் மரணம் அடைந்தார். அவரது நினைவாக அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் சிறந்த படத்தை இயக்கும் முதல்பட இயக்குனருக்கு கொல்லுப்பு ஸ்ரீனிவாஸ் விருது வழங்கி கவுரவித்து வருகிறார்கள்.
2015ம் ஆண்டுக்கான விருது லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு விருது வழங்க நடுவர் குழு பரிந்துரைத்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தங்களை மறைத்துக் கொண்டு போலி முகத்துடன் வலம் வருபவர்களை பற்றிய கதையசம் கொண்ட படம் லென்ஸ். ஜெயபிரகாஷ் நாராயணனே முக்கிய கேரக்டரில் நடித்தும் உள்ளார்.
விருது வழங்கும் விழா வருகிற 12ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கிறது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், இந்திப்பட இயக்குனர்கள் பொம்மன் இராணி, சுதிர் மிஸ்ரா, ப்ரியதர்ஷன், நடிகைகள் ஜெயசுதா, கல்கி கோச்சின் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.