போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த அநேகபேர் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெங்கட்பிரபு சரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை வெங்கட்பிரபு மறுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் தற்போது சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். என்னுடைய வருங்கால படங்களை விரைவில் நான் ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறேன். சரோஜா - 2 படத்தை பற்றி நான் சிறிதளவு கூட யோசித்தது இல்லை. தற்போது என்னுடைய முழு கவனமும் சென்னை 28 - பாகம் 2 மீது தான் இருக்கிறது. எப்படி 2007 ஆம் ஆண்டு சென்னை 28 தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு அற்புதத்தை ஏற்படுத்தியதோ, அதே போல் 2016 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகமும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தும் என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.