இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
ரம்மி ஐஸ்வர்யா ராஜேஷ், விஜயசேதுபதிக்கு ஜோடியாக சில படங்களில் நடித் தார். இப்போது தர்மதுரையில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர் தவிர, விதார்த், சிபிராஜ், அட்டகத்தி தினேஷ், அருள்நிதி, உதயநிதி என மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த கதாநாயகி என்றில்லாமல் சிறிய கேரக்டர்களில் நடிக்க அழைத்தாலும் அவர் மறுப்பதில்லை. நாலு சீன் நச்சுன்னு இருந்தாலும் போதும் என்று சொல்லி கமிட்டாகி விடுகிறார்.
அந்த வகையில், தமிழில் கைநிறைய படங்கள் வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தியில், டாடி படத்தில் நடிப்பதை அடுத்து மலையாளத்தில் நிவின்பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆக, தமிழில் முன்னணி கதாநாயகி என்கிற இடத்துக்கு வராமலேயே பரவலாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இதைப்பார்த்து சிலர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்திய நடிகை என்கிறார்கள். அந்த அளவுக்கு எந்த மொழிப்படமாக இருந்தாலும் கதாபாத்திரங்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது என்று பெருமையாக பேசி வருகிறார்கள்.
இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், என்னை இந்திய நடிகை என்று கூறுவதைக் கேட்கையில் சந்தோசமாக உள்ளது. ஆனால், இந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்கிற பயமும் உள்ளது. அதனால், சின்ன படம், பெரிய படம் என்கிற பாகுபாடு பார்க்காமல் எந்த வேடமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து வருகிறேன் என்கிறார்.