போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதமி மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார். பாபநாசம் படத்திற்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தயாராகியிருக்கும் 'நமது' படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பாபநாசம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கேற்ற கதைகளாக அமையவில்லை. அக்கா, அண்ணி மாதிரியான முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிக்கவும் விருப்பமில்லை. 120 படத்துக்குமேல் நடித்து விட்டேன். அப்போதும் சரி, இப்போதும் சரி எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். பணத்துக்காகவோ, கட்டாயத்தின் பேரிலோ நடிக்க மாட்டேன்.
எனக்கு நான் தான் ரசிககை விமர்சகி எல்லாம். என் நடிப்பை நானே விமர்சனம் செய்து கொள்வேன். மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலைப்பட படமாட்டேன். மீண்டும் நடிக்க வந்திருப்பது என் மகளுக்கும், கமலுக்கும் சந்தோஷம். இருவருமே என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் மகள் சுபலட்சுமி தற்போது பிளஸ் 2 படிக்கிறாள். அவளுக்கு நடிப்பை விட படம் இயக்குவதில் தான் ஆர்வம் இருக்கிறது. நானும் நிறைய படங்களில் நடித்து விட்டேன். படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. விரைவில் அது நடக்கும் என்றார்.