பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
'மேல்நாட்டு மருமகள்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் மேல்நாட்டு மருமகளாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரீயன் நடிக்கிறார். ராஜ்கமல் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோக்ராஜ், சாத்தையா நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், கிஷோர் குமார் இசை அமைக்கிறார். புதுமுகம் எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்.
“எல்லோருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் ஹீரோவுக்கு ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பதுதான் கனவு. அதனால் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் நாயகியை அவர் போகும் இடமெல்லாம் சென்று அவருக்கு உதவிகள் செய்து மனதில் இடம் பிடிக்கிறார். இருவரும் காதலித்தார்களா?, கல்யாணம் பண்ணிக் கொண்டார்களா? என்பதுதான் கதை” என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.