‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்தபோது, இனிமேல் அவர் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பார் போலிருக்கு. அதைத்தான் இந்த படத்தின் தலைப்பு மூலம் சொல்லியிருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், அப்படத்தின் ஆடியோ விழாவில், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதற்காக இந்த டைட்டீலை வைக்கவில்லை. இந்த கதைக்கு இதுதான் பொருத்தமாக இருந்தது. அதனால் டைரக்டர் வைத்திருக்கிறார் என்று சொன்ன சந்தானம், ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாகவும் நடிப்பேன் என்று அந்த மேடையில் சொன்னார்.
அதன்காரணமாக, அதையடுத்து அஜித்தின் 57வது படம் மற்றும் ஆர்யா நடிக் கும் ஒரு புதிய படத்தில் காமெடியனாக நடிப்பதற்கும் சந்தானத்திடம் பேசியிருந்தனர். அவரும் ஓகே சொல்லியிருந்தார். ஆனால், தில்லுக்குத்துட்டு படத்தின் வெற்றி காரணமாக இனிமேல் காமெடியனாக நடிப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் சந்தானம். அதனால் அந்த படங்களில் தன்னால் நடிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விலகி விட்டார். இதனால் அஜித்தரப்பு பெரிதாக பீல் பண்ணாதபோதும், ஆர்யாதான் எனது நண்பர் சந்தானம் இப்படி வாக்கு தவறி விட்டாரே -என்று பீலிங்ஸை வெளிப்படுத்தினாராம்.