ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ரஜினி நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‛‛கபாலி. இப்படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை கலக்கியிருக்கிறது. ரஜினியும், படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கபாலி பட ரிலீஸின் போது தியேட்டரில் அதிக கட்டணத்திற்கு விற்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. இதுப்பற்றி இயக்குநர் ரஞ்சித் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதன் விபரம் வருமாறு...
கபாலி டிக்கெட் அதிக விலைக்கு விற்றது நியாயமே இல்லை. காசி தியேட்டரில் நான் படம் பார்த்தபோது ரசிகர்களே வந்து என்னிடம் பேசினார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்றிருக்கிறார்கள். இது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனக்கு அதிகாரம் இருந்தால் நிச்சயம் தடுத்திருப்பேன். அதிகவிலைக்கு டிக்கெட் விற்பதில் எனக்கு ஒரு சதவீதம் கூட உடன்பாடு கிடையாது.
ரஜினி பாராட்டினார் : கபாலி படம் பார்த்துவிட்டு ரஜினி, இயக்குநராக ஜெயித்துவிட்டீர்கள், ரஜினியை வித்தியாசமாக காட்டியுள்ளீர்கள், இது வழக்கமான ரஜினி படம் அல்ல, படம் சூப்பராக வந்துள்ளது. நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
இது ரஜினிக்காக பண்ண படம் கிடையாது. என்னிடம் இருந்த கதையை அவரிடம் சொன்னேன். என்னை பொறுத்தமட்டில் நான் ரஜினியை சரியாக பயன்படுத்தியிருக்கிறேன். விளம்பரம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏனென்றால் இது ரஜினி படம். நாங்களே எதிர்பார்க்கவில்லை, தனியார் நிறுவனங்கள் தொடங்கி பத்திரிகைகள் வரை எல்லோரும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டனர். இதனால் எனக்கு பயம் இருந்தது.
இவ்வாறு பல விஷயங்களை ரஞ்சித் பகிர்ந்து இருக்கிறார்.