போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
காமெடியனாக அறிமுகமான கருணாகரன் தற்போது ஹீரோவாக பிசியாகிவிட்டார். சமீபத்தில் 'கண்ணீர் அஞ்சலி' என்ற படத்தில் ஹீரோக நடிக்க ஆரம்பித்தார். தற்போது 'பொதுநலன் கருதி' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். அஸ்மிதா ஹீரோயின். இவர்கள் தவிர ஆதித் அருண், சந்தோஷ், யோக்ஜேபி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரீஷ் கணேஷ் இசை அமைக்கிறார். 'மரியான்' இயக்குனர் பரத்பாலா உதவியாளர் சீயோன் இயக்குகிறார்.
“பிழைப்பு தேடி பல்வேறு இடங்களிலிருந்து சென்னை வரும் 4 இளைஞர்களின் கதை. அந்த இளைஞர்கள் சென்னை வர காரணம் என்ன? சென்னையில் அவர்களுக்கு எந்த மாதிரியான வாழ்க்கை கிடைக்கிறது. அதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கதை. குடும்ப பிரச்சினையிலிருந்து உலக மயமாக்கல் வரை பேசுகிறது படம். எளிய மனிதர்களின் கதை என்பதால் அதற்கேற்ற நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்” என்றார் இயக்குனர் சீயோன்.