போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. உலக அளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர். அதேபோல் தமிழ்த்திரையுலகைச்சேர்ந்த பெரும்பாலானோர் முதல் நாளே கபாலியை பார்த்து ரசித்து விட்டனர். அதையடுத்து தங்களது மேலான கருத்தினையும் இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்நீச்சல், அரிமாநம்பி உள்பட பல படங்களில் நடித்துள்ள பிரியாஆனந்த் இன்னும் கபாலி படத்தை பார்க்கவில்லையாம். அவரது நட்பு வட்டாரத்தினர் கபாலி டிக்கெட் உள்ளது என்று அவரை அழைத்தபோதும் அவரால் படம் பார்க்க முடியவில்லையாம். அதனால் அவருக்கு பெரிய ஏமாற்றமாகி விட்டதாம். அதுபற்றி தனது டுவிட்டரில் செய்தி வெளிப்படுத்தியிருக்கிறார் பிரியாஆனந்த்.
அவர் கூறியிருப்பதாவது, நான் ரஜினி சாரின் பெரிய ரசிகை. அதனால் எல்லோரையும் போலவே கபாலி படத்தை பார்க்க நானும் ஆவலாக இருந்தேன். ஆனால் தற்போது கெளதம் கார்த்தியுடன் நான் நடித்து வரும் முத்துராமலிங்கம் படப்பிடிப்பு கேரளாவில் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக என்னால் கபாலி படத்தை பார்க்க இயலவில்லை. அது எனக்கு மனதளவில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.