போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சினிமாவில் அதிகமான புதுமுகங்களை தனது படங்களில் அறிமுகம் செய்தவர் மண்வாசனை இயக்குனர் பாரதிராஜா. அப்படி அவரால் அறிமுகம் செய்யப்பட்ட பலர் பின்னர் பிரபல நடிகர் நடிகைகளாகி விட்டனர். கார்த்திக், ராதிகா, ராதா, சுகன்யா, ரஞ்சிதா, நெப்போலியன் என்று நீண்ட பட்டியலே உள்ளது. இந்நிலையில், 2013-ல் அன்னக்கொடி என்ற படத்தை இயக்கிய பாரதிராஜா, அதன்பிறகு பாண்டியநாடு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் இயக்க திட்டமிட்டிருந்த குற்றப்பரம்பரை கதையை டைரக்டர் பாலா இயக்குவதாக கேள்விப்பட்டு, முன்னதாகவே அப்படத்தின் பூஜையை தேனியில் தொடங்கினார் பாரதிராஜா. அதையடுத்து அந்த படம் குறித்த தகவல்களே இல்லை. ஆனால் இப்போது, அவர் ஒரு புதுமையான காதல் கதையை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்ப தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படி பாரதிராஜா இயக்கும் படத்தில் விக்ரமின் மகன் துருவ், டைரக்டர் வசந்தின் மகன் ரித்விக் வருண் ஆகிய இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.