‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜிகர்தண்டா படத்தின் ஹிட்டுக்குப்பிறகு ஹீரோவான பாபி சிம்ஹா, அந்த சமயத்தில் மளமளவென்று பல படங்களில் கமிட்டானார். அதில் ஒன்றுதான் பாம்புசட்டை. பாபிசிம்ஹாவுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்த அந்த படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார், ஸ்டீபன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர் மனோபாலா முதல் காப்பி அடிப்படையில் அந்த படத்தை தயாரித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்தபோது பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதையடுத்து பாபிசிம்ஹா நடித்த மசாலா படம், உறுமீன், பெங்களூர் நாட்கள், கோ-2, இறைவி என பல படங்கள் திரைக்கு வந்த நிலையில், தற்போது மீண் டும் பாம்புசட்டை படவேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எடிட்டிங், டப்பிங், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், தற்போது டிஐ பணிகள் தொடங்கப்படுகிறதாம். அந்த வகையில், இன்னும் ஓரிரு மாதங்களில் பாம்புசட்டை திரைக்கு வந்து விடும் என்கிறார்கள்.