‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர், பிரபுவை நாயகனாக வைத்து இயக்கிய படம் டூயட். இந்த படத்தில்தான் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜை தமிழுக்கு அவர் அறிமுகம் செய்தார். அதையடுத்து கல்கி என்ற படத்தில் அவருக்கு நெகடீவ் ஹீரோ வாய்ப்பும் கொடுத்து பிரகாஷ்ராஜை பெரிய நடிகராக்கினார் கே.பாலசந்தர். அதையடுத்து வேகமாக வளர்ந்த பிரகாஷ்ராஜ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி வில்லனாக உருவெடுத்தார். பின்னர், ஹரி இயக்கிய சிங்கம் படத்தில் வில்லனாக நடித்த பிறகு அந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அப்போது சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜின் பர்பாமென்ஸைப்பார்த்து அசந்து போன பாலிவுட் டைரக்டர்கள் அவருக்கு இந்தி படங்களில் வில்லன் வேடம் கொடுத்து முன்னணி வில்லனாக்கி விட்டனர்.
அதனால் முன்பு மாதிரி பிரகாஷ்ராஜினால் தென்னிந்திய சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்க முடியவில்லை. வடஇந்திய படங்களில் ரொம்ப பிஸியாக இருக்கிறார். அதோடு அவரது சம்பளமும் இப்போது மும்மடங்காகி விட்டது. அதனால் மெகா பட நிறுவனங்கள் மட்டுமே அவரை அணுக முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இப்போது பிரகாஷ்ராஜ்க்கான பல வில்லன் வேடங்கள் இன்னொரு கன்னட நடிகரான கிஷோருக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது பிரகாஷ்ராஜ் நடிக்க வேண்டிய 3 படங்களில் கமிட்டாகியிருக்கிறார் கிஷோர்.