‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இது இந்த செய்தியின் தலைப்பு மட்டுமல்ல. புதிதாக உருவாக இருக்கும் ஒரு படத்தின் தலைப்பும் இதுதான். எம்.ஜி.ஆரின் “திருடாதே பாப்பா திருடாதே...” பாடலில் “திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம்போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது...” என்ற வரி வரும். அதில் ஒரு வரியை உருவி படத்துக்கு தலைப்பாக வைத்து விட்டார்கள்.
குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சுதர் இயக்குகிறார். டூ மீடியா பப்ஸ் நிறுவனத்தின் சர்பில் பி.எஸ்.ரகுநாதன், பிரபு வெங்கடாச்சலம் தயாரிக்கிறார்கள். கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிக்கிறார்கள். அஷ்வத் இசை அமைக்கிறர், மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏவிஎம் புதிய பிள்ளையார் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
“மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்துள்ள பாடலை மையமாக கொண்டு தான் திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற தலைப்பை நாங்கள் வைத்தோம். எப்படி மக்கள் திலகத்தின் பாடலானது ஒரு பாசிட்டிவான ஆற்றலை ரசிகர்கள் உள்ளத்தில் விதைத்ததோ, அதே போல் எங்களின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படமும் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். முழுக்க முழுக்க பொழுது போக்கு திரைப்படமாக உருவாகி வரும் எங்களின் திட்டம் போட்டு திருடுற கூட்டம் திரைப்படமானது ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு செதுக்கப்பட்டு, அவர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்" என்கிறார் இயக்குனர் சுதர்.