‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ராம நாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்சை தற்போது அவரது மகன் என்.ராமசாமி நடத்தி வருகிறார். சிறு பட்ஜெட் படங்களை தயாரித்து வந்த நிறுவனம் தற்போது பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் தயாரித்த 'தில்லுக்கு துட்டு' படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தேனாண்டாள் பிலிம்ஸ் இதுவரை 99 படங்கள் தயாரித்துள்ளது. தனது 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. 'பாகுபலி' போன்ற வரலாற்ற பின்னணி கொண்ட படத்தை 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதனை சுந்தர்.சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகும் இந்தப் படத்திற்கு 'சங்கமித்ரா' என்று டைட்டில் வைத்துள்ளனர்.
மூன்று மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். 'பாஜிராவ் மஸ்தானி' என்ற பாலிவுட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். அடுத்த மாதம் இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடக்கிறது. ஹாலிவுட் சண்டை கலைஞர்கள், கிராபிக்ஸ் கலைஞர்கள், உடை அலங்கார கலைஞர்கள் பணியாற்ற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 200 கோடியில் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது 'சங்கமித்ரா'.