பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
திருட்டு விசிடி தயாரிப்பு, மற்றும் ரிலீசுக்கு முன்பே இணைய தளங்களில் படங்கள் வெளிவருவது அதிகரித்துள்ளது. சமீபத்தில் 'உத்த பஞ்சாப்' படம் ரிலீசுக்கு முன்பு வெளிவந்து பரபரப்பானது. அப்படி வெளியான பிரதி தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்ட பிரிதி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது ஒரு படம் தணிக்கைக்கு அனுப்பும்போது அங்கிருந்து அது திருட்டு விசிடி கும்பலுக்கும், போலி இணையதளங்களுக்கும் போய் சேருகிறது. தமிழிலும் இமான் டம்மியாக இசை அமைத்து சென்சாருக்கு அனுப்பிய ஒரு படம் இணையதளத்தில் வெளியானதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் மத்திய தணிக்கை வாரியம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க புதிய நடைமுறை ஒன்றை கொண்டு வர இருக்கிறது. இனி தணிக்கை குழுவிற்கு டிஜிட்டல் பிரதியை பாஸ்வேர்டுடன் தான் அனுப்ப வேண்டும். தணிக்கை குழு படம் பார்க்கும்போது பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஒருவர் வந்து பாஸ்வேர்டை ஒப்பன் பண்ண வேண்டும். தணிக்கை குழு குறிப்பிடும் திருத்தங்கள்ல படங்கள் காப்பியை படம் வெளியாகும் நாள் அன்று தணிக்கை குழுவிடம் கொடுத்தால் போதும். இதனால் படத்தின் முழு பொறுப்பும் தயாரிப்பு நிறுவனத்திடமே இருக்கும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக இந்திப் படங்களுக்கும். பின்னர் மற்ற மொழி படங்களுக்கும் விரிவு படுத்த தணிக்கை குழு முடிவு செய்திருக்கிறது.