‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தற்போது சினிமா தியேட்டர்களில் தினமும் மதியம், மாலை, இரவு காட்சிகள் ஒளிபரப்பாகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை காட்சியும் இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அரசு அனுமதி வழங்கும்.
இந்த நிலையில், இனி சினிமா தியேட்டர்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் கொண்டு வந்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் தியேட்டர்களில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் நிபந்தனை.
தியேட்டர்கள் போலவே வணிக வளாங்களும் 24 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை மாநில அரசுகள் அப்படியே ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாநிலங்கள் தனியாக சட்டத்தை உருவாக்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.