போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சுசீந்திரன் இயக்குனராகவும், விஷ்ணு ஹீரோவாகவும், சூரி காமெடியனாகவும் அறிமுகமான படம் 'வெண்ணிலா கபடி குழு'. இந்த மூவரும் இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஹீரோயினாக நடித்த சரண்யா மோகன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது 7 வருடத்திற்கு பிறகு வெண்ணிலா கபடி குழுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள்.
இதில் பாரதிராஜாவின் 'அன்னக்கொடி' படத்தில் நடித்த லக்ஷ்மண், விஷ்னு நடித்த கேரக்டரில் நடிக்கிறார். சூரி அதே புரோட்டா கேரக்டரில் நடிக்கிறார், இவர்கள் தவிர அப்புக்குட்டி, ரவிமரியா நடிக்கிறார்கள். படத்தின் கதையை சுசீந்திரன் எழுதிக் கொடுத்திருக்கிறார். அவரது உதவியாளர் செல்வசேகரன் இயக்குகிறார். சாய் அற்புதம் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் பூங்காவனம், ஆனந்த் தயாரிக்கிறார்கள். ஹீரோயின் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.