‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுந்தர்.சி நடிப்பில் அண்மையில் வெளியான முத்தின கத்தரிக்கா படத்தின் ஒரிஜினலான 'வெள்ளிமூங்கா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிக்கி கல்ராணி, தமிழில் 'டார்லிங்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தமிழில் அவர் நடித்த முதல் படமே ஹிட்டானதால், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான 'யாகாவராயினும் நா காக்க' படம் ஓடவில்லை. இந்நிலையில், இந்த வருடம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்து வெளிவந்த ரெண்டு படங்களில் கோ-2 படு தோல்வியடைந்தது.
விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த எழிலின் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படம் நிக்கி கல்ராணியின் கேரியரில் வெற்றிப்படமாகவும் அமைந்துள்ளது. நிக்கி நடித்த படம் வெற்றிப் படமாக அமைந்துவிட்டதால், அவர் கைவசம் இப்போது ஏகப்பட்ட படங்கள்.
ராகவா லாரன்ஸுடன் 'மொட்ட சிவா கெட்ட சிவா', ஜி.வி.பிரகாஷுடன் 'கடவுள் இருக்கான் குமாரு' படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிக்கி கல்ராணி, தற்போது மேலும் 2 தமிழ்ப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். விக்ரம் பிரபு தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படமொன்றிலும், ஜீவாவுக்கு ஜோடியாக 'கீ' என்ற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார் நிக்கி.
'கீ' படத்தை செல்வராகவனிடம் அசோசியேட்டாகப் பணிபுரிந்த கலீஷ் என்பவர் இயக்குகிறார். ரொமான்டிக் காமெடியாக உருவாக உள்ள இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்க உள்ளதாம். பட வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால் தன்னுடைய சம்பளத்தையும் சில லட்சங்கள் அதிகரித்திருக்கிறாராம். ஏற்கனவே 40 லட்சம் வாங்கிய நிக்கி தற்போது 60 லட்சம் கேட்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.