போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இன்றைய தேதியில் பிசியான நடிகர் யார் என்றால் சமுத்திரக்கனிதான். வில்லன், குணசித்திரம், ஹீரோ என கலந்துகட்டி நடித்து வரும் சமுத்திரக்கனி தான் தற்போது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் ஆக்டர். தனக்கு இத்தனை டிமாண்ட் இருப்பது தெரிந்தும், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு அப்பா படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். தனக்கு வாழ்க்கைக் கொடுத்த நாடோடிகள் படத்தை நினைவுகூர்கிற வகையில் தன்னுடைய பட நிறுவனத்துக்கு நாடோடிகள் என்று பெயர் வைத்திருக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதை சொல்கிற படமாக உருவாகியிருக்கும் அப்பா படம் இந்த வாரம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 250 தியேட்டர்களை கமிட் பண்ணி இருக்கிறார்கள். ரிலீஸுக்கு மேலும் சில நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.