‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தன்னுடைய முதல் படமான 3 படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் மூலம் உலகமெங்கும் கவனஈர்ப்பு பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பிறகு தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். படங்களுக்கு இசையமைப்பதில் கவனம் செலுத்துவதோடு அவ்வப்போது தனிப்பட்ட இசை ஆல்பங்களுக்கும் இசையமைக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று, லைவ் கான்சர்ட்ஸ் என்கிற இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விரைவில் சர்வதேச இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார் அனிருத். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான டிப்லோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத். இந்த செய்தியை டிப்லோவே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் அனிருத்தின் புகழ் மேலும் உச்சத்திற்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ரம், ரெமோ, தல 57 உட்பட பல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தன்னை அறிமுகப்படுத்திய தனுஷை கழற்றிவிட்டதுதான் ஆச்சர்யம்.