‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி சென்றபோது அங்குள்ள அரசு அவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்தது. அதோடு படப்பிடிப்பு நடத்து வதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தது. அதனால், எந்தவித இடையூறும் இன்றி கபாலி படத்தை இயக்கினார் ரஞ்சித். அதோடு, கபாலி படத்தை மலேசியாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கபாலி படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் இருமுகன் படத்தின் படப்பிடிப்பும் மலேசியாவில்தான் நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெற்று வரும் ஒரு சண்டை காட்சிக்கான லொகேசனை மலேசிய அரசுக்கு சொந்தமான ஒரு இடத்தில் கண்டு பிடித்தார்களாம். அதில் படமாக்க அத்தனை எளிதில் அனுமதி கிடைக்காது என்று கூறப்பட்டதாம். ஆனால் விக்ரம் படபிடிப்பு என்றதும் உடனே கொடுத்து விட்டார்களாம். அதனால் திட்டமிட்டதை விட அதிக நாட்கள் மலேசியாவில் முகாமிட்டு இருமுகன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் ஆனந்த் சங்கர். ஆக, ரஜினியை அடுத்து விக்ரமிற்கும் மலேசியாவில் வரவேற்பு கிடைத்துள்ளது.