இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
திருச்சியை சேர்ந்த சாமிகண்ணு வின்செண்ட்தான் தமிழ்நாட்டில் முதல் சினிமாவை திரையிட்டவர். சாமிக்கண்ணு திருச்சி பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் டிசைனராக பணியாற்றினார். அப்போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டுபாண்ட் என்பவர் சினிமா புரொஜக்டரை வைத்து ஒவ்வொரு நாடாக சென்று படம் காட்டிக் கொண்டிருந்தார். இலங்கையில் படம் காட்டிவிட்டு திருச்சி வந்தார். வந்த இடத்தில் அவருக்கு உடல்நிலை மோசமானது.
புரொஜக்டரை விற்று விட்டு நாடு திரும்ப நினைத்தார். சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்த சாமிக்கண்ணு வின்செண்ட் அவரிடமிருந்த புரொஜக்டரரை 2250 ரூபாய்க்கு வாங்கினார். 1905ம் ஆண்டு இது நடந்தது. அன்றைய ரூபாயின் மதிப்பின்படி அது பெரிய தொகை.
அதன் பிறகு திருச்சி ஜோசப் கல்லூரி அருகில் ஒரு டூரிங் கொட்டகை அமைத்து அதில் படங்களை திரையிட ஆரம்பித்தார். முதல் படம் 'லைப் ஆஃப் ஜீசஸ்' என்ற மவுனப்படம். தியேட்டருக்கு மக்கள் ஆச்சயர்த்தோடு வந்த பார்த்துச் சென்றார்க்ள்.
1909ம் ஆண்டு சென்னை பாரீஸ் கார்னரில் டெண்ட் கொட்டகை அமைத்து படம் திரையிட்டார். அதுதான் சென்னையின் முதல் தியேட்டர். கோவையில் வெரைட்டி திரையரங்கத்தை நிறுவினார். இதுதான் முதல் நிரந்தர திரையரங்கம், தமிழ் சினிமாவின் தந்தை என்று சாமிக்கண்ணு வின்செண்டை குறிப்பிடுவார்கள்.