‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது சில படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மாதவன், கொடைக்கானல், ராஜவாய்க்கால் பகுதியில் சுமார் 4.8 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதில் ஒரு பகுதியை மாதவன் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர் மீது திண்டுக்கலை சேர்ந்த கணேசன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக ஜூலை 11ம் தேதிக்குள் மாதவன் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.