போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
'காதலிக்க நேரமில்லை' படத்தில் அறிமுமானவர் அந்தக் கால சாக்லேட் ஹீரோ ரவிச்சந்திரன். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் படம் இயக்கினார், தயாரித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவரது ஒரு மகன் அம்சவர்த்தன் சினிமாவில் அறிமுகமாகி நடித்தார். ஆனால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இப்போது படம் தயாரிக்கிறார்.
இந்த நிலையில் ரவிசந்ந்திரனின் பேத்தி தான்யா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தற்போது 'சவரக்கத்தி' படத்தில் நடித்து வரும் மிஷ்கின் அடுத்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் படத்தில் தான்யாதான் ஹீரோயின். தான்யாவின் சொந்த பெயர் அபிராமி. அந்த பெயரில் ஏற்கெனவே ஒரு நடிகை இருப்பதால் தான்யா என்று பெயர் மாற்றியவர் மிஷ்கின். தான்யா என்றால் அழகான கண்கள் என்று பொருளாம்.
“ரவிச்சந்திரனின் பேத்தி என்பது சின்ன அடையாளம் தான். ஆனால் என் திறமை நான் தேர்வு செய்யும் படங்கள், கடுமையான உழைப்பு இவற்றின் மூலம்தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மிஷ்கின் சார் படத்தில் என்ன கேரக்டர் என்ன கதை என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவரை நம்பி நடிக்கிறேன்” என்கிறார் தான்யா.