‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுப்ரமணியபுரம், ஈசன் படங்களில் நடித்து வந்தபோது இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வந்த சமுத்திரகனி, சாட்டை படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்கத்தை குறைத்து விட்டு நடிப்பில் முழுவீச்சில் இறங்கினார். முதலில் பாசிட்டீவான வேடங்கில் நடித்து வந்தவர், பின்னர் நெகடீவ் ரோல்களிலும் நடித்தார். ஆனால் அப்படி அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெறவில்லை. அதையடுத்து அவருக்கான நடிப்பு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. அதனால் இயக்கத்தில் இறங்கி அப்பா படத்தை இயக்கினார்.
இந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த விசாரணை படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. விளைவு மறுபடியும் சமுத்திரகனியின் நடிப்பு மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சில படங்களில் முக்கிய வேடங்களுக்கு கமிட்டாகி வரும் அவர், தனுஷ்-வெற்றிமாறன் இணையும் வடசென்னை படத்திலும் இப்போது கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். இதுதவிர விரைவில் வெளியாகயிருக்கும் அம்மா கணக்கு, கொளஞ்சி ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி.