‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் இறுதிகட்ட பணிகளும் தற்போது நிறைவடைந்து விட்டது. மேலும், கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்தபோதே ஷங்கரின் 2.ஓவில் நடிக்கத் தொடங்கிய ரஜினி இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். அதேசமயம், ஷங்கர் கொடுத்த ஒரு கேப்பில் கபாலி டப்பிங்கையும் பேசி முடித்தார். அதையடுத்து மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த டைரக்டர் ரஞ்சித், இப்போது கபாலி படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் வைத்திருக்கிறார். அதேசமயம் கபாலி ஜூலை15-ந்தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தபோதும், இன்னும் ரிலீஸ் தேதியை முடிவெடுக்கவில்லை என்கிறார் அவர்.
இந்த நிலையில், கபாலி படத்தை சமீபத்தில் ரஜினிக்கு போட்டு காண்பித்தாராம். அப்போது படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக சொன்னாராம் ரஜினி. அதையடுத்து படத்தை பார்த்த மேலும் சில முக்கியஸ்தர்களிடமிருந்தும் பாசிட்டீவான பதிலே வந்துள்ளதாம். அதனால் மனதளவில் உற்சாகத்தில் இருக்கும் டைரக்டர் ரஞ்சித், ஏற்கனவே கபாலி டீசருக்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வருவதால், படத்திற்கும் அதே அளவு வர வேற்பை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். முக்கியமாக, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கபாலி படம் இருக்கும் என்கிறார் ரஞ்சித்.