இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்ல, அவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தன. இன்று நடைபெற உள்ள பிலிம்பேர் விருது வழங்கும் விழாவிலும் தனி ஒருவன் படத்துக்காக சிறந்த குணசித்திர நடிகர் பிரிவில் அரவிந்த்சாமியின் பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்பட விருதுகள் பற்றி, "சில விருதுகள் கேலிக்கூத்தானவை. நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைக்கும்போதே சொல்வார்கள் நீங்கள் ஒரு விருது பெற்றுள்ளீர்கள் என்று. அப்போது நீங்கள் அவர்களிடம் சொல்லுங்கள், "என்னால் நிகழ்ச்சிக்கு வரமுடியாது விருதை வேறு யாருக்காவது வழங்குங்கள். எல்லா நடிகர்களும் அவர்களுடைய உழைப்புக்காக விருது பெற தகுதியானவர்களே. எனவே நீங்கள் விரும்பும் யாராவது ஒருவருக்கு அந்த விருதைக் கொடுங்கள்" என்று. விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தேர்தலைப் போல் ஆக்காதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் அடித்திருக்கிறார் அரவிந்த்சாமி.
எந்த விருது வழங்கும் விழாவை மனதில் வைத்து அரவிந்த்சாமி இப்படி ட்வீட் செய்துள்ளார் என்று தெரியவில்லை. ஒருவேளை இன்றைக்கு வழங்கப்படும் விருது தனக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் அறிந்து இப்படி கமெண்ட் அடித்திருக்கிறாரா அரவிந்த்சாமி?