குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
'ரோமியோ ஜூலியட்' வெற்றிக்குப் பிறகு ஜெயம்ரவி, ஹன்சிகா, லக்ஷ்மண் மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபுதேவா தயாரிக்கிறார். இமான் அண்ணாச்சி, விடிவி கணேஷ், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தனி ஒருவனுக்கு பிறகு அரவிந்த்சாமி இதில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார்.
'போகன்' பற்றி ஜெயம்ரவி கூறியதாவது: நான் இதுவரை நடித்த படங்களிலேயே இது வித்தியாசமானது. அதேபோல போலீஸ் கதைகளில் இது மிகவும் வித்தியாசமானது. 'தனி ஒருவன்' போலவே இதிலும் போலீஸ் கேரக்டர்தான். முதல் பகுதியில் ஹீரோவாக இருப்பேன். இரண்டாம் பகுதியில் வில்லனான மாறுவேன். அரவிந்த்சாமி முதல் பகுதியில் வில்லனாக இருப்பார். அடுத்த பகுதியில் வேற மாதிரி இருப்பார். அப்படி ஒரு திரைக்கதை. போகனாகிய நான் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிறவன். அரவிந்த்சாமி எல்லா ஆசைகளையும் அனுபவித்து முடித்தவர். இந்த இரண்டு பேருக்குமான கதைதான் 'போகன்'.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறேன். டூப் போடாமல் பில்டிங் டூ பில்டிங் தாவியிருக்கிறேன். சத்யாமாகத்தான் சொல்றேன். நம்புங்க. ஹன்சிகாவுடன் நடிக்கும் 3வது படம் முதல் படத்தில் பள்ளி மாணவி மாதிரி நிறைய கத்துகிட்டிருந்தார். இப்போ எனக்கே பாடம் நடத்துகிறார். நல்ல வளர்ச்சி. 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. என்றார் ஜெயம்ரவி.