ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா (சைமா) வருகிற ஜூன் 30 மற்றும் ஜூலை 1ந் தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் மொழிகளில் 2015ம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 19 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் துபாய், சார்ஜா, கோலாம்பூரில் நடந்த விழா இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்தப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி அறிமுகம் நேற்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜெயம்ரவி, ராணா நடிகைகள் குஷ்பு, நிக்கி கல்ராணி, வேதிகா கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சைமா விருது விழாத் தலைவர் பிருந்தா பிரசாத் “இந்த ஆண்டு சைமா விருது வழங்கும் விழா சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ'வுடன் இணைந்து நடக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெறும் “செஞ்சிட்டாளே...” என்ற பாடல் விருது வழங்கும் விழாவில் வெளியிடப்படுகிறது. முந்தைய விழாக்களை விட இந்த ஆண்டு விழாவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சிங்கப்பூர் மக்களின் நீண்ட நாள் விருப்பத்தை இந்த விழா பூர்த்தி செய்யும். விருது நிகழ்ச்சி நடைபெறும் இரண்டு நாட்களும் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னணி நடிகைகள், நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவில் கலந்து கொள்ள தென்னிந்திய முன்னணி நடிகர்கள் நடிகைளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.