‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு ரஜினி, கமல் ஆகிய இருவரும்தான் இருதுருவங்களாக இருந்தனர். அந்த காலகட்டத்தில் நடித்து வந்த சில காமெடியன்களில் ஒய்.ஜி.மகேந்திரனும் ஒருவர். தற்போதும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் அவர், அவ்வப்போது நாடகங்களும் நடத்தி வருகிறார். அதேபோல் அவரது மகள் மதுவந்தியும், பெருமாளே உள்பட சில மேடை நாடகங்களை தயாரித்து, நடித்தும் வந்தார். ஆனால் இதுவரை சினிமா பக்கம் வராத அவர் தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார்.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடித்துள்ள தர்மதுரை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் மதுவந்தி, தற்போது ஆர்யா, கேத்ரின் தெரசா நடித்து வரும் கடம்பன் என்ற படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகர்களெல்லாம் தங்களது வாரிசுகளை சினிமாவில இறக்கி விட்டு வந்தபோதும், ஒய்.ஜி.மகேந்திரன் மட்டும் தனது மகளை நாட கங்களில் கவனம் செலுத்த வைத்திருந்தார். ஆனால் அவர் நாடகங்களில் நடித்து வரும் செய்தி வெளியானதை அடுத்து அவருக்கு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடிச்செல்ல இப்போது என்ட்ரி கொடுத்துள்ள மதுவந்தி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பாராம்.