தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-28 படத்தில் அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அந்த படத்தில் அவருடன் ஜெய், பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா என பலர் நடித்தனர். அவர்களில் மிர்ச்சி சிவாவின் நடிப்பு பேசும்படியாக இருந்ததால், மீடியாக்கள் அவரை குறிப்பிட்டு எழுதின. விளைவு, அதன்பிறகு கவனிக்கப் படும் நடிகரானார் மிர்ச்சி சிவா. அடுத்தபடியாக தமிழ்ப்படம், சரோஜா, கல கலப்பு, தில்லுமுல்லு என பல படங்களில் நடித்து ஒரு இடத்தை பிடித்து விட்டார். தற்போது மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கும் மிர்ச்சி சிவா, நானும் இன்றைக்கு கோலிவுட்டில் ஒரு நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு பத்திரிகைகள்தான் முக்கிய காரணம். சென்னை-28 படத்தில் எனது நடிப்பை வெகுவாக பாராட்டி எழுதினார்கள். அதனால்தான் அதற்கடுத்து சரோஜா, தமிழ்ப்படம் என இரண்டு படங்களில் ஷோலோ ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றேன். ஆக, மீடியாக்கள் நினைத்தால் ஒரு நடிகனை உருவாக்க முடியும் என்பதை நான் புரிந்து கொண்டேன் என்கிறார் மிர்ச்சி சிவா.