போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இந்திய சினிமாவில் குறிப்பிட்டு சொல்லும்படியான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு எப்போதும் இடம் உண்டு. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்த இசைஞானி இளையராஜா, அவ்வப்போது ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சிகளையும் நடத்துவார். சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக இப்போது ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இளையராஜா. சென்னை, நேரு ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 11ம் தேதி நடக்கும் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபல பாடகர்களும் கலந்து கொண்டு பாட உள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தை நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட செலவுக்காக வழங்கப்பட இருக்கிறது. இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, டி.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.