‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க மே 6ம் தேதி வெளியான படம் '24'. விக்ரம் குமார் இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் சுமாரான வெற்றி பெற தமிழில் எதிர்பாராத விதத்தில் ஃபிளாப் ஆகிவிட்டது. படம் வெளியான ஒரு சில நாட்கள் மட்டும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் அதன் பின் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாமல் போய்விட்டது.
ஒரு வசனத்தை சூர்யா திரும்பத் திரும்பப் பேசியதும், அடுத்து என்ன நடக்கும் என குழந்தை கூட சொல்லும் விதமாக அமைக்கப்பட்ட திரைக்கதையும், சமந்தாவின் வத்தல், தொத்தலான அழகும் படத்திற்கு மைனஸ் பாயின்டாக அமைந்தன. போதாததற்கு சூர்யாவே வில்லனாக வேறு நடித்து இருக்கும் கொஞ்ச நஞ்ச வெறுப்பையும் அதிகப்படுத்திவிட்டார்.
எல்லாவற்றுக்கு மேலாக படம் வெளியான அன்றே திருட்டு விசிடி வெளியானதும் படத்தின் வசூலை வெகுவாக பாதித்துவிட்டது. தயாரிப்பாளராக சூர்யாவுக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த இந்தப் படம் கடந்த வாரமே வெளியான பாதி தியேட்டர்களில் தூக்கப்பட்டது. நேற்று மீதியுள்ள பாதியுள்ள தியேட்டர்களில் தூக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட சில மாநரங்களில் மட்டும் சுமார் 50க்கும் குறைவான தியேட்டர்களில் தற்போது இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
2 வாரம் கூட தாங்காமல் 20 கோடிக்கும் மேல் '24' நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.