‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
டைரக்டர் ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களில் நடித்த சூர்யா, தற்போது சிங்கம் படத்தின் மூன்றாவது பாகமான எஸ்-3 படத்தில் நடித்து வருகிறார். முந்தைய இரண்டு சிங்கம் படங்களை விடவும் மிரட்டலான கதையில் நடித்து வரும் சூர்யா, முதலில் விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப் பில் கலந்து கொண்டவர், பின்னர் காரைக்குடி, மலேசியா என சில லொகேசன் களில் நடந்த படப்பிடிப்பில் நடித்து வந்தார். ஆனால், விரைவில் எஸ்-3 பட யூனிட் மீண்டும் விசாகப்பட்டினத்துக்கு செல்லவிருக்கிறதாம்.
காரணம், அங்குள்ள ரயில்வே ஸ்டேசன் லொகேசனில் ஒரு பிரமாண்டமான சண்டை காட்சியை படமாக்கப்போகிறாராம் டைரக்டர் ஹரி. அந்த பகுதியில் ரயில்வே பிளாட்பாரம் அதிகமாக இருப்பதால் அங்கு ஒரு செட்டும் உருவாக்கப்படுகிறதாம். மேலும், ரயிலில் அந்த சண்டை காட்சியின் பெரும்பகுதி நடை பெறவிருப்பதால், ஒரு நாள் வாடகைக்கு ரயிலை புக் பண்ணப்போகிறார்களாம். என்னதான் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரயிலாக இருந்தபோதும், அதற்கான அனுமதியை டெல்லியில்தான் வாங்க வேண்டுமாம். அதனால் அதற்கான அனுமதி கடிதம் ஒன்றை டெல்லிக்கு அனுப்பி விட்டு, ரயிலில் படமாக்க அனுமதி கிடைக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறார் டைரக்டர் ஹரி.