‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இந்தியத் தேர்தல் ஆணையம் நடைபெற இருக்கின்றன சட்டசபை தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக பலவிதமான செயல்களைச் செய்து வருகிறது. ஆனால், மக்களிடையே மதிப்பு மிக்கவர்களாக விளங்கம் சிலர் வேண்டுமென்றே தேர்தலில் ஓட்டளிக்கும் கடமையில் இருந்து தவறுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.
தமிழ்த் திரையுலகில் உலகம் போற்றும் கலைஞர்களாக விளங்கும் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரும் வரும் மே 16ம் தேதி ஓட்டுப் போட வருவார்களா என்பது சந்தேகமே. நடிகர் கமல்ஹாசன் அன்றைய தினம்தான் அவருடைய 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் ஆரம்பிக்க உள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அன்றைய தினம் மலேசியாவில் இசைக் கச்சேரி ஒன்றை நடத்த உள்ளார்.
கிராமத்தில் இருக்கும் படிப்பறிவு இல்லாத மக்கள் கூட தவறாமல் தங்களது ஓட்டைப் போட முன் வரும் போது கமல்ஹாசனும், ரகுமானும் இப்படி தேர்தல் நேரத்தில் வாக்களிக்கத் தவறுவது தவறான முன்னுதாரணமாகவே அமையும். பல நட்சத்திரங்களை வைத்து வாக்களிக்க வாருங்கள் என்று விளம்பரப் படத்தை எடுத்த தேர்தல் ஆணையம், நல்லவேளையாக இவர்கள் இருவரை வைத்து எடுக்கவில்லை.