பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக இருந்த திரு என்கிற திருநாவுக்கரசு மகளிர் மட்டும் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனார். அதன்பிறகு கமல்ஹாசனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராகி ஹேராம், ஆளவந்தான், காதலா காதலா, படங்களை ஒளிப்பதிவு செய்தார். அதன் பிறகு இந்திக்கு சென்றவர் அங்கு கரம் மசாலா, பூல்கபுல்யா, ஆக்ரோஷ், கிரிஷ் 3 உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் பணியாற்றினார்.
தற்போது 6 வருட இடைவெளிக்கு பிறகு 24 படம் மூலம் தமிழக்கு வந்திருக்கிறார். சூர்யாவைத் தவிர வேறு யாரும் இந்த படத்தை தயாரித்திருக்க முடியாது. அவர் மீதுள்ள நம்பிக்கையில்தான் இந்த படத்தில் பணியாற்றினேன் என்கிறார் திரு.
அவர் மேலும் கூறியதாவது: ஏன் 6 ஆண்டு காலம் தமிழில் படம் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். இந்தியில் பணியற்றிகொண்டிருந்ததால் நேரமின்மை ஒரு காரணம் என்றாலும் நல்ல படத்துக்காக காத்திருந்தேன் என்பதும் உண்மை. அந்த ஏக்கம் 24ல் நிறைவேறியுள்ளது. இதற்கு முன் விக்ரம் குமார் அவர் படங்களுக்கு என்னை அழைத்த போதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்தாலும் 24 இவ்வளவு சுலபமாக முடிவடைந்து இருக்காது. நல்ல நிலையில் தடையின்றி படப்பிடிப்பு நடத்த படப்பிடிப்பு குழுவுக்கு என்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் ஒருங்கிணைத்து அளித்து ஊக்குவித்தார்.
எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான், என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல் தனது டெடிக்கேசனை ப்ராக்டிக்கலாகவும் செயல்படுத்துவார் வில்லன் “ஆத்ரேயா''. கதாப்பாத்திரத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார்.
இன்று சினிமாவில் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. இது சினிமாவுக்கு மிகவும் பெரிய சவாலாகவும் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை. அந்த தொழில்நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும் விதமாக அமைந்தது 24 கதைக்களம். இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை சிறப்பு அம்சமாக அமைந்தது என்கிறார் திரு.