எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா |
முதல் படம் தோல்வியடைந்து விட்டால் அந்த நடிகைகளை சினிமா உலகம் ராசியில்லாத நடிகை என்று ஓரங்கட்டி விடும். ஆனால், கீர்த்தி சுரேஷ் விசயத்தில் அது நடக்கவில்லை. அவர் தமிழில் நடித்த முதல் படமான இது என்ன மாயம் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வெளியான ரஜினிமுருகன் சூப்பர் ஹிட்டாகி கீர்த்தி சுரேஷை காப்பாற்றி விட்டது. அதோடு, விஜய்யுடன் நடிக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியரில் ஒரு பெரிய மேஜிக்கே நடந் துள்ளது.
மேலும், விஜய்யுடன் நடிக்கும் படத்தில் இதுவரை நடித்ததை விட சூப்பர் பர்பாமென்ஸ் கொடுத்து நல்ல நடிகை என்கிற பெயரை எடுத்து விட வேண்டும் என்று தயாராகிக்கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன்காரணமாக, டைரக்டர் பரதனை ஒருநாள் தனது அம்மா மேனகாவுடன் சந்தித்து, முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளைப்பற்றி கேட்டதோடு, அந்த வசனங்களையும் ஒரு காப்பி எடுத்து வந்துவிட்ட கீர்த்தி சுரேஷ், அதை மனப்பாடம் செய்து விட்டாராம். அதோடு, அம்மாவின் ஆலோசனைபடி ரிகர்சலிலும் ஈடுபட்டிருக்கிறாராம். விஜய்யுடன் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலுமே சிங்கிள் டேக்கில் ஓகே செய்து விட வேண்டும் என்பதுதான் கீர்த்தி சுரேஷின் ஆசையாக உள்ளதாம். அதற்காகத்தான் முன்னோட்டம் பார்த்து வருகிறாராம் நடிகை.