‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சில தினங்களுக்கு முன் ஏதோவொரு வேலையாக பிரசாத் லேப் வளாகத்துக்கு வந்திருந்தார் கபாலி பட இயக்குநரான பா.ரஞ்சித். அதே நேரம் அங்குள்ள தியேட்டரில் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடைபெற்று கொண்டிருந்தது. படம் முடிந்து பத்திரிகையாளர்கள் வெளியே வர, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பி.ஆர்.ஓ. ஓடிப்போய் பா.ரஞ்சித்தின் காதில் என்னவோ சொன்னார்.
அவ்வளவுதான்... ஒரே ஓட்டமாக ஓடிய பா.ரஞ்சித், பத்திரிகையாளர்களின் பார்வையில் படாதவாறு ஒளிந்து கொண்டார். அவரிடம் அந்த பி.ஆர்.ஓ. என்ன சொல்லி இருப்பார்? பத்திரிகையாளர்கள் வருகிறார்கள். கபாலி பற்றி ஏதாவது வாயைக்கிளறுவார்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். எதற்கு வம்பு என்று நினைத்தாரோ என்னவோ ஒரே ஓட்டமாக ஓடி ஒளிந்து கொண்டார் பா.ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் என பா.ரஞ்சித் இயக்கியது இரண்டே படங்கள்தான். அதற்குள் அவருக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு அவரது திறமையைவிட மீடியாக்கள் அவருக்கு தந்த ஆதரவும் பாராட்டுக்களும்தான் முக்கிய காரணம். ரஜினி படம் கிடைத்ததும் பழசை மறந்துவிட்டார் பா.ரஞ்சித்.